45 நிமிட பயணம், 5 நிமிடத்தில்! சென்னையின் புதிய அடையாளம்! ஸ்டீல் பாலம், பெரிய மாற்றம்!

சென்னையின் தி.நகர் பகுதியில் செப்டம்பர் 30ம் தேதியான இன்று திறக்கப்பட்ட அன்பழகன் பாலம் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முக்கிய கட்டமைப்பாகும். முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைத்தார். இந்த புதிய பாலம் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் முதல் மெயின் சாலையை இணைக்கிறது. இதன் மூலம், தி.நகர் பகுதியை நோக்கி வரும் பயணிகள் 45 நிமிட பயணத்தை வெறும் 5 நிமிடங்களில் முடிக்க முடியும்.

பாலம் 1.2 கிலோமீட்டர் நீளமாகும் மற்றும் ரூபாய் 164.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இது சென்னையில் முதல் முறையாக கட்டப்பட்ட ஸ்டீல் பாலம். இந்த பாலம், முன்னாள் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பாலம் கட்டுவதில் 3,800 மெட்ரிக் டன் ஸ்டீல் மற்றும் 55 தூண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது சைதாப்பேட்டை, கிண்டி, அடையார், கோடம்பாக்கம், அண்ணா நகர் மற்றும் நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு முக்கியமான பயண பாதையாக அமையும்.

அன்பழகன் பாலம் சென்னையின் மிகப்பெரிய வர்த்தக மையமான தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, நகரின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பாலத்தின் திறப்பு விழாவிற்கு சென்னையை சேர்ந்த மக்கள் பெரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். தொடர்ந்து புதிய கட்டமைப்பின் அம்சங்களை நேரில் பார்வையிட்டனர்.

Related News

Latest News