இயக்குனர் எஸ்.ஜெயக்குமார் இயக்கி 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “புளூ ஸ்டார்”. இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன் என பலர் நடித்தனர்.கிரிக்கெட் தொடர்பான பொழுதுபோக்கு அம்சங்களையும் விளையாட்டைச் சுற்றி இயங்கும் தீவிரமான அரசியல் பிரச்சனைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட ‘இப்படம் அமைந்தது.
கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் ‘ப்ளூ ஸ்டார்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சாந்தனு பெற்றுள்ளார்.இது குறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த திரைப்படம் எனக்கு ஒரு கதாபாத்திரத்தை விட அதிகமாக கொடுத்தது. இது எனக்கு வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும் நினைவுகள், பாடங்கள் மற்றும் அன்பைக் கொடுத்தது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றி பீம்ஜி அண்ணா மற்றும் இயக்குநர், என்னை நம்பியவர்கள், என் சக நடிகர்கள் மிகவும் அன்பானவர்கள். தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவின் ஒவ்வொரு நபருக்கும். மிக முக்கியமாக, எனது பயணத்தை ஆதரித்த எனது அன்பான பார்வையாளர்களுக்கு. இது உங்கள் அனைவருக்கும் நன்றி.. என பதிவிட்டுள்ளார்.
