Saturday, September 6, 2025

மொத்தம் 30 பணியிடங்கள் : உச்சநீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு, உடனே அப்ளை பண்ணுங்க

டெல்லி உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அலுவலர் (Court Master) பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 30 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

பணியிட விவரங்கள்
பதவி: நீதிமன்ற அலுவலர் (Court Master)

காலியிடங்கள்: 30

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு கொண்டு இருக்க வேண்டும், சுருக்கெழுத்து தட்டச்சு திறன் அவசியம்

அனுபவம்: குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்

வயது வரம்பு: 30 முதல் 45 வயது வரை (மத்திய அரசு விதிகளின்படி இடஒதுக்கீட்டுக்கு வயது தளர்ச்சி உண்டு)

சம்பளம்: ரூ. 67,700

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து தட்டச்சுத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிப்பதற்கான விவரங்கள்
விண்ணப்பிக்க: அனுமதிக்கப்பட்ட இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும்

வெப்சைட்: https://www.sci.gov.in/

விண்ணப்பக் கட்டணம்: பொதுவினர் – ரூ. 1500 / எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ. 750

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2024

உங்கள் தகுதி, ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News