Friday, August 8, 2025
HTML tutorial

இந்தியாவிற்காக களமிறங்கிய சீனா! மோடியின் ஒற்றை முடிவு.. உலக அரசியல் தலைகீழ்!

உலக அரசியல் சதுரங்கத்தில் காய்கள் வேகமாக நகர்த்தப்படுகின்றன. இந்தியா மீது அமெரிக்கா விதித்திருக்கும் அதிரடி வரி விதிப்பால், யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, நமக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறது சீனா. எதிரும் புதிருமாக இருந்த இரு நாடுகள், ஒரே எதிரியைச் சமாளிக்க ஒன்று சேருமா?

“இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது, உக்ரைன் போருக்கு நிதியளிப்பதைப் போன்றது” என்று கூறி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நமது நாட்டின் மீது 50 சதவீத வரியை விதித்து அதிரடி காட்டியிருக்கிறார். இது ஒருதலைபட்சமானது, நியாயமற்றது என இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில்தான், ஒரு ஆச்சரியமான குரல் இந்தியாவுக்கு ஆதரவாக ஒலித்திருக்கிறது. அது, சீனாவின் குரல். “வரிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என சீனா, அமெரிக்காவை நோக்கிக் கூறியிருக்கிறது.

சீனாவின் இந்த திடீர் பாசத்திற்குப் பின்னால் ஒரு தெளிவான ராஜதந்திரம் உள்ளது. இந்தியாவை விட அதிகமாக ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை வாங்குவதே சீனாதான். இன்று இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி, நாளை தங்களின் கதவையும் தட்டும் என்பதை சீனா நன்கு உணர்ந்திருக்கிறது.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, உறைந்து போயிருந்த இந்திய-சீன உறவில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுமா?

அமெரிக்காவின் அழுத்தத்தைச் சமாளிக்க, ஆசியாவின் இந்த இரு பெரும் சக்திகளும் கைகோர்க்குமா? பிரதமர் மோடியின் சீனப் பயணம், உலக வர்த்தக அரசியலின் போக்கையே மாற்றியமைக்குமா? என்பது தான் இப்போது கேள்வியாக இருக்கிறது.

இப்போது இது, உலக நாடுகள் உற்று நோக்கும் ஒரு மிக முக்கியமான தருணமாகவே பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News