Friday, August 8, 2025
HTML tutorial

மாதம் ₹15,000 முதலீடு போதும்! உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா!

நம்மள்ல பலருக்கும் ஒரு கனவு இருக்கும்… நாமளும் ஒரு நாள் கோடீஸ்வரர் ஆகணும், நம்ம குடும்பத்தோட ஆசைகளை நிறைவேத்தணும்’னு. ஆனா, மாசம் வாங்குற சம்பளத்துல இதெல்லாம் எப்படி சாத்தியம்னு யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா?

“நான் கோடீஸ்வரன் ஆகிறதாவது, நடக்கிற கதையா?”னு நீங்க நினைக்கலாம். ஆனா, உங்க கனவை நிஜமாக்க ஒரு ரகசிய சூத்திரம் இருக்கு. அதுதான் “15 x 15 x 15” ஃபார்முலா! இது ஒரு மேஜிக் இல்லை, இது ஒரு எளிமையான கணக்கு. இதை சரியா புரிஞ்சுகிட்டா, நீங்களும் கோடீஸ்வரர்தான்! வாங்க, இந்த சூத்திரத்தை விரிவா, ஒன்னொன்னா பார்க்கலாம்.

முதல்ல, இந்த ஃபார்முலால இருக்கிற மூணு ’15’-க்கும் என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்குவோம்.

முதல் 15: இது உங்களுடைய பொறுமையைக் குறிக்கிறது.

அதாவது, நீங்க 15 வருடங்களுக்கு உங்க முதலீட்டைத் தொடரணும். ஒரு மாங்கன்று வச்ச உடனே பழம் தராது இல்லையா? அதுக்கு நாம பொறுமையா தண்ணி ஊத்தி வளர்க்கணும். அதே மாதிரிதான், உங்க பணமும் வளர, அதுக்கு கொஞ்சம் நேரம் கொடுக்கணும். குறுகிய காலத்துல பணத்தை எடுத்தா, பெரிய லாபம் கிடைக்காது. நீண்ட கால முதலீடுதான் நம்ம முதல் படி.

இரண்டாவது 15: இது உங்களுடைய ஒழுக்கத்தைக் குறிக்கிறது.

அதாவது, நீங்க மாசாமாசம், தவறாம 15,000 ரூபாயை ,மியூச்சுவல் ஃபண்ட்ல SIP மூலமா முதலீடு செய்யணும். இது ஒரு பழக்கம் மாதிரி. மாசம் பிறந்ததும், மளிகைச் சாமான் வாங்குற மாதிரி, உங்க எதிர்காலத்துக்காக இந்த 15,000 ரூபாயை ஒதுக்கணும். ஒரு மாசம் கூட தவறவிடாம, ஒழுக்கமா முதலீடு செய்றது ரொம்ப முக்கியம்.

மூன்றாவது 15: இது உங்க பணத்தோட வளர்ச்சியை குறிக்கிறது.

அதாவது, நீங்க முதலீடு செய்யுற மியூச்சுவல் ஃபண்ட், வருஷத்துக்கு சராசரியாக 15 சதவீத வருமானம் தர்றதா இருக்கணும். இதுதான் உங்க பணத்தை பல மடங்கா பெருக்குற இன்ஜின். பங்குச் சந்தை சார்ந்த நல்ல மியூச்சுவல் ஃபண்டுகள், நீண்ட காலத்துல இந்த அளவுக்கு வருமானம் கொடுக்க வாய்ப்பிருக்கு.

சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம். இந்த மூணையும் நீங்க சரியா செஞ்சா, என்ன நடக்கும்னு பார்க்கலாமா?

நீங்க மாசம் 15,000 ரூபாய் வீதம், 15 வருஷத்துக்கு முதலீடு செய்றீங்க. அப்போ, உங்க கையில இருந்து நீங்க கட்டுன மொத்த பணம் 27 லட்சம் ரூபாய்.

ஆனா, 15 வருஷம் கழிச்சு, உங்க பணம் வளர்ந்து எவ்வளவு இருக்கும்னு நினைக்கிறீங்க? இங்கதான் அந்த மேஜிக் நடக்குது. “கூட்டு வட்டியின் சக்தி” (Power of Compounding), அதாவது வட்டிக்கு வட்டி போடுறதால, உங்க முதலீடு வளர்ந்து, உங்க கைக்கு கிடைக்கப்போறது சுமார் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்!

யோசிச்சுப் பாருங்க! நீங்க போட்டது 27 லட்சம்தான். ஆனா, லாபம் மட்டும் கிட்டத்தட்ட 73 லட்சம் ரூபாய்!இதுக்கு பேர்தான் ஸ்மார்ட் முதலீடு.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. நாங்க சொன்ன இந்த 15 சதவீத வருமானம் ஒரு கணிப்புதானே தவிர, கேரண்டி கிடையாது. ஆனா, நீண்ட காலத்துல நல்ல திட்டங்கள்ல முதலீடு செய்யும்போது, நல்ல வருமானம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கு.

அதனால, முதலீடு செய்றதுக்கு முன்னாடி, SEBI அங்கீகாரம் பெற்ற ஒரு நிதி ஆலோசகரை அணுகி, உங்க தேவைகளைப் பேசி, உங்களுக்குப் பொருத்தமான திட்டத்துல முதலீடு செய்யுங்க.

சரியான திட்டமிடலும், கொஞ்சம் பொறுமையும் இருந்தா… கோடீஸ்வரர் ஆகுற உங்க கனவு, நிச்சயம் ஒரு நாள் நிஜமாகும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News