பெண் அரசியல்வாதி ஒருவரை விமர்சித்து யூடியூப் பிளாட்பாரத்தில் வீடியோ வெளியிட்ட வழக்கில், கேரள பத்திரிகையாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று (ஜூலை 26, 2025) விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் நாகரத்னா, கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், “யூடியூப் வீடியோக்கள் மூலமாக யாரையும் குற்றவாளி அல்லது உறுதிப்படுத்த முடியாது. சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். நேர்மறையான தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்; ஊழல் எதிர்ப்பு என்ற பெயரில் அவதூறு கருத்துகள் பரப்ப முடியாது” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.