இப்போது உலகமே பதட்டத்தில் மூழ்கியிருக்கும் நேரம் இது.
ஒரு பக்கம் ரஷ்யா–உக்ரைன் போராட்டம்… இன்னொரு பக்கம் ஈரான்–இஸ்ரேல் மோதல். கிழக்கு, மேற்கு என உலக நாடுகள் அனைத்தும் தங்களது எதிரிகளை கண்காணிக்க தீவிரமாக விரும்பும் கால கட்டம் இது.
இத்தனை பதட்டத்துக்கு நடுவில், இந்தியாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பு தோன்றியுள்ளது. அது என்னன்னா — செயற்கைக்கோள் தயாரிப்பு!
இப்போது ஒவ்வொரு நாட்டுக்கும் பாதுகாப்பு மிகவும் முக்கியமான விஷயமாகிவிட்டது. இதனால்தான் பத்து நாடுகள்… நூறு தேவைகள் என நாடுகள் செயற்கைக்கோள்களை தேடி வருகின்றன. அந்த தேவைப்படும் தரத்தை குறைந்த செலவில் கொடுக்கக் கூடிய நாடு தான் இந்தியா. அதுவும் ISRO மட்டும் இல்ல, தனியார் நிறுவனங்களும் இப்போது இந்த போட்டியில இறங்கி விட்டன.
ஆஸ்திரேலியா, நார்வே, ஹங்கேரி, போலந்து, மேற்கு ஆசிய நாடுகள்… எல்லாம் இந்தியாவிடம் செயற்கைக்கோள்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. ஏனென்றால், இந்தியா அதிக செலவில்லாமல், உயர்தர தொழில்நுட்பத்துடன் திட்டங்களை நிறைவேற்றக்கூடிய நாடு.
இதற்காக இந்தியாவின் பெரும்பாலான தொழில்நுட்ப நகரங்களான பெங்களூரு, சென்னை போன்ற இடங்களில் இருந்து அனந்த் டெக்னாலஜிஸ், திகந்தரா, கேலக்ஸி ஐ ஸ்பேஸ் (GalaxyEye Space) என்ற நிறுவனங்கள் பெரிய பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. இவை செயற்கைக்கோள்களை விண்வெளியில் ஏவிக் கொண்டு, உலக நாடுகளுக்கே தரவை பகிரும் அளவுக்கு வளர்ந்து வருகின்றன.
2020-ல் IN-SPACe என்னும் இந்தியாவின் விண்வெளித் துறைக்கு தனியார் நிறுவனங்களை வரவேற்கும் அமைப்பு உருவான பிறகு, அக்னிகுல் காஸ்மோஸ், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் போன்ற நிறுவனங்கள், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டுகளை உருவாக்கி, மிக குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் களம் இறங்கிவிட்டன.
அட… இந்த சந்தை எவ்வளவு பெரியது தெரியுமா?
2023-ல் உலக விண்வெளி சந்தை 570 பில்லியன் டாலர் அளவில் இருந்தது. 2035-க்குள் அது 1.8 டிரில்லியன் டாலர் ஆக மாறும் என கணிக்கப்படுகிறது. இப்போது இந்தியாவின் பங்கு 8.4 பில்லியன் அளவில் இருக்கிறது. 2033-க்குள் அதை 44 பில்லியன் டாலர் வரை கொண்டு செல்லும் அளவுக்கு இந்தியா வளரப் போகிறது. அதாவது, இந்தியா உலக சந்தையில் 7%–8% பங்கு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது!
இது இந்தியா அமெரிக்காவிற்கு நிகரான பொருளாதார நாடாக விரைவில் உருமாறும் என்பதற்கான ஒரு முன்னேற்றமான சந்தர்ப்பமாகவே இது இருக்கின்றது.