Sunday, June 29, 2025

‘ஆதார் கார்டு’ல இப்படி ஒரு விஷயம் இருக்கா? உடனே பண்ணுங்க !

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாகும். இன்று கூட பலர் பழைய காகித ஆதார் அட்டையையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த அட்டை விரைவில் பழுது படும், நீரில் சேதமடையும் என்பதற்கான பயம் எப்போதும் இருக்கும். லேமினேஷன் இல்லாமல் பயன்படுத்த முடியாத நிலை. இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க, UIDAI ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவே — பிவிசி ஆதார் அட்டை.

இந்த பிவிசி ஆதார், ஏ.டி.எம். கார்டைப் போல தடிமனாக இருக்கும். கிழியாது, நீரில் சேதமடையாது. பாக்கெட்டில் வைத்துக் கொண்டு எளிதாக எடுத்துச் செல்லலாம். பர்ஸில் வைத்தாலும் சுருண்டு போகாது. கையாள எளிதானது, பாதுகாக்க வசதியானது. முக்கியமாக, பழைய ஆதார் போல் இந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டையும் அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும்.இதன் விலை ரூ.50 மட்டுமே.

இதை நீங்கள் பெற வேண்டுமென்றால்,

முதலில், UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (myaadhaar.uidai.gov.in) செல்லுங்கள்.


மொழியை தேர்ந்தெடுத்து “My Aadhaar” என்பதை தேர்வு செய்து→ “Order Aadhaar PVC Card” என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்ததாக உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை அல்லது 28 இலக்க SRN-ஐ பதிவிடுங்கள்.


பிறகு கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு “Send OTP” கிளிக் செய்யவும்.
மொபைலில் வந்த OTP-ஐ உள்ளிடவும்.


இதனைத் தொடர்ந்து உங்கள் விவரங்களை சரிபார்க்கவும்.
அடுத்து இதற்கான 50 ரூபாய் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள்.
கட்டணம் செலுத்திய பிறகு, SRN எண்ணும் ரசீதும் வரும். அதை பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்.


5 வேலை நாட்களில், அட்டை உங்கள் முகவரிக்கு தபால் மூலம் வரும்.

இதுதான் பிவிசி ஆதார் அட்டை ஆர்டர்கான எளிய படி!

இந்த உலகம் முழுவதும் டிஜிட்டலாக மாறி வரும் இந்த காலத்தில், நாமும் நம்முடைய அடையாள ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதற்கான சிறந்த தேர்வே இந்த பிவிசி ஆதார் அட்டை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news