ஒரு வாரத்திற்கு முன்… உலகையே உலுக்கிய ஒரு தாக்குதலால், மத்திய கிழக்கு முழுவதும் சுடுகாடாய் மாறியது.
ஜூன் 13 அன்று அதிகாலை, இஸ்ரேல் தனது ஆபரேஷன் “ரைசிங் லயன்” என்ற பெயரில், ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல நகரங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில், ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள், உயர் இராணுவத் தலைவர்கள்—IRGC தளபதி ஹொசைன் சலாமி(hossein-salami), குலாம்-அலி ரஷீத் (Gholam Ali Rashid), அணு விஞ்ஞானிகள் டாக்டர் தெஹ்ரான்சி மற்றும் ஃபெரிடவுன் அப்பாஸி (Fereydoun Abbasi) உள்ளிட்ட 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக, வெறும் சில மணி நேரங்களிலேயே, ஈரான் தனது “ட்ரூ பிராமிஸ் III” ஆபரேஷனைத் தொடங்கியது. 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இஸ்ரேலின் மீது மழைபோல் வீழ்ந்தன. டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்கள் தாக்கப்பட்டன. புகழ்பெற்ற “Iron Dome” உட்பட, இஸ்ரேலின் பல அடுக்கு பாதுகாப்புகள் கூட சில ஏவுகணைகளை இடைமறிக்க முடியாமல் போனதால், பரவலான சேதமும் உயிர் இழப்பும் ஏற்பட்டது.
ஈரான் இந்த தாக்குதலில், பழைய “காடர்” (Qadr) மற்றும் “இமாத்” (Emad) ஏவுகணைகளை மட்டுமல்ல, அதேசமயம் “செஜ்ஜில்-2” (Sejjil-2), “கெய்பர் ஷெகான்” (Kheibar Shekan), மேலும் “ஃபட்டா-1” (Fattah-1) எனும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் பயன்படுத்தியது. இந்த ஃபட்டா-1, ஒலியின் வேகத்தைவிட 15 மடங்கு வேகத்தில் பாயக்கூடியது மற்றும் இடைமறிக்கவே முடியாத அளவுக்கு அதிவேகமானது.
இஸ்ரேல்-ஈரான் மோதல் ஒரு புள்ளியில், தற்போது அமெரிக்காவையே களத்தில் இறக்க செய்துவிட்டது. நேற்று மாலை அமெரிக்கா தனது B-2 ஸ்டெல்த் பாம்பர்களை ஈரான் மீது இயக்கியது. மிக ஆழமான நிலத்தடி அமைப்புகளிலும் ஊடுருவக்கூடிய “பங்கர் பஸ்டர்” குண்டுகளை ஏற்றி, ஈரானின் மூன்று முக்கிய அணு உலைக்கள் — ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் — மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலால், ஈரானின் அணுசக்தி ஆயுத திட்டமே முடங்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இதுவே முடிவல்ல. ஈரானின் ரகசிய ஆயுதக் கிடங்கில் 2,000க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. அதில் கோர்ராம்ஷஹர்-4 (khorramshahr) எனப்படும் மிக ரகசியமான, 2,000 கி.மீ. தூரம் சென்றடையக்கூடிய ஏவுகணை இன்னும் பயன்படுத்தப்படவில்லை. அது பயன்படும் நாளே உலகத்திற்கு ஒரு பெரிய turning point ஆக மாறும்.
இப்போது நிலைமை என்ன? ஒரு முழுமையான உலகப்போர்? இல்லையெனில் கடைசி சமாதான வாய்ப்பு? இந்த இரண்டு ஒன்று தான் இந்த கேள்விக்கு பதிலாக இருக்கும்…
உலகம் கவனித்து பார்க்கும் இந்த நொடிகளில்… அடுத்த தாக்குதலே வரலாற்றை எழுதப் போகிறது…