சமீபத்தில் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் பயங்கர விபத்தில் சிக்கி, 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உலகளவில் அதிக விபத்துகளை ஏற்படுத்திய விமான நிறுவனங்கள் மற்றும் மாடல்கள் குறித்து ஆய்வு செய்தபோது, முதல் இடத்தில் போயிங் 737 வகை விமானம் உள்ளது. 1960களில் இருந்து சேவை வழங்கி வரும் இந்த விமானம், இதுவரை 5,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுடன் அதிக விபத்துகளை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது இடத்தில் போயிங் 747 வகை விமானம் உள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 3,700க்கும் மேற்பட்ட பயணிகள் பல விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். சமீபத்திய அகமதாபாத் விபத்தில் போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இடத்தில் ரஷ்யாவின் டுபோலேவ் Tu-154 விமானம் உள்ளது. இதன் விபத்துகளில் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நான்காம் இடத்தில் அமெரிக்காவின் McDonnell Douglas நிறுவனம் உள்ளது. DC-9 மற்றும் MD-80 வரிசை விமானங்கள் பல விபத்துகளில் சிக்கி, 1,300க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
ஐந்தாம் இடத்தில் பிரான்சின் ஏர்பஸ் நிறுவனம் உள்ளது. அதன் A300 வகை விமானம் விபத்துகளில் சுமார் 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏர்பஸ் தற்போது உலகின் நம்பகமான விமான நிறுவனமாக இருந்தாலும், அதன் ஆரம்ப கால சேவையில் பல விபத்துகள் பதிவாகியுள்ளன.