Saturday, June 21, 2025

இஸ்ரேலின் ‘பொக்கிஷத்தை’ அழித்த ஈரான் : தக்க ‘பதிலடி’ கொடுப்பாரா நெதன்யாகு?

8 நாட்களைக் கடந்தும்கூட ஈரான் – இஸ்ரேல் போர் இன்னும் உக்கிரமாக நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் சமபலத்துடன் மோதுவதால், இந்த போர் எப்போது முடிவுக்கு வரும்? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தநிலையில் இஸ்ரேல் நாட்டின் பொக்கிஷமாகத் திகழ்ந்த ,அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான வெய்ஸ்மேன் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், ஆய்வக கட்டிடங்களின் அழிவால், இஸ்ரேலின் பலவருட ஆராய்ச்சியை ஈரான் வீணடித்து உள்ளது.

இது இஸ்ரேலுக்கு நிச்சயம் பலத்த அடியாகத்தான் இருக்கும். ஏனெனில் இஸ்ரேலின் “தொழில்நுட்ப மூளை” என்று அழைக்கப்படும் வெய்ஸ்மேன் நிறுவனம், உலகின் முன்னணி அறிவியல் ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாகும். கணிதம், அறிவியல், கணினி அறிவியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 2500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இதில் பணியாற்றி வந்தனர்.

30க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள், நூலகம், தங்குமிடம் என்று ஏராளமான வசதிகள் இதில் உள்ளன. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் பயன்படுத்தப்படும், பல புதிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டவை தான். இஸ்ரேல் ராணுவத்திற்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், இந்த நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது.

இஸ்ரேலின் ‘கிரீட ரத்தினமாகத்’ திகழ்ந்த வெய்ஸ்மேன் நிறுவனத்தை, பாலிஸ்டிக் ஏவுகணையால் தாக்கி ஈரான் அழித்துள்ளது. ஈரானின் இந்த தாக்குதலால் வெய்ஸ்மேன் கட்டிடத்தில் எதுவுமே மிஞ்சவில்லை என்று, ஆராய்ச்சியாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். 1934ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி நிறுவனம் உலகின் முக்கியமான ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 432 கோடி ரூபாயாகும்.

தற்போது இதை தாக்கி அழித்திருப்பதன் மூலம் இஸ்ரேலின் மதிப்பை குறைப்பதில், ஈரான் தார்மீக ரீதியாக வென்றுள்ளதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news