கூகுள், பேஸ்புக், ஆப்பிள், ஜி-மெயில், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களின் 16 பில்லியன் பயனர் தரவுகள் கசிந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இணைய வரலாற்றில் இத்தனை பெரிய அளவிலான பயனர் தகவல்கள் கசிந்து இருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் 184 மில்லியன் பயனர் தகவல்கள் கசிந்தது மிகப்பெரிய அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இவை infostealer என்ற malware-ன் மூலம் திருடப்பட்டு இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த malware ஆனது பாதிக்கப்பட்ட சாதனங்களில் இருந்து யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் போன்ற தகவல்களை சத்தம் இல்லாமல் திருடக் கூடியது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு ஒரே தீர்வு பாஸ்வோர்டை உடனடியாக மாற்றிவிடுவது தான். நீங்கள் ஒரு பாஸ்வேர்டை பல்வேறு தளங்களில் அல்லது கணக்குகளில் பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் தற்போது அவற்றை மாற்றுவதற்கு சரியான நேரம் இதுதான். மேலும் two-factor authentication தேவைப்படும் இடங்களில் அவற்றை பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பு தரக்கூடியதாகும்.