Friday, June 20, 2025

பிரம்மோஸை விட மூன்று மடங்கு ‘ஆபத்து’! இந்தியா உருவாக்கும் ‘Top’ ஏவுகணை!

இந்தியா தற்போது ஒரு புதிய போர் கட்டமைப்புக்குள் நுழைந்துவிட்டது. உலகத்தில் நிலைமைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் வேகத்தில், நாட்டின் பாதுகாப்பு சக்தியை அதிகரிப்பது இன்றியமையாததாகிவிட்டது. இந்த சூழ்நிலைக்கேற்ப, DRDO – இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு – புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு “விஷ்ணு திட்டம்” என்ற பெயர் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஏவுகணையின் பெயர் ET-LDHCM. இது ஒரு நீண்ட தூர ஹைப்பர்சோனிக் க்ரூஸ் மிசைல். இதன் வேகம் அட்டகாசம் – மணிக்கு 11,000 கிலோமீட்டர். அதாவது, பாகிஸ்தானை முழுமையாக சில நிமிடங்களில் தாக்கும் திறன் இதில் இருக்கிறது. இது மட்டும் அல்ல, இதன் தாக்கும் தூரம் 1500 கிலோமீட்டர்கள், பிரம்மோஸை விட மூன்று மடங்கு ஆபத்தானது.

இந்த ஏவுகணையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஸ்க்ராம்ஜெட் எஞ்சின், நம்முடைய உள்நாட்டு நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. எனவே இந்த எஞ்சினால் , பெரும் வேகத்தைப் பெற முடிகிறது. மேலும், 2000°C வெப்பநிலையை எளிதாகத் தாங்கும் திறன் இதில் உள்ளது.

இது குறைந்த உயரத்தில் பயணிக்க முடியும். ரேடார் கண்டறிய முடியாத வகையில் பயணித்து, எதிரியின் முக்கியமான தளங்களை சுட்டெறியும் திறன் கொண்டது. முக்கியமாக, இது நிலம், வான், கடல் – எங்கு வேண்டுமானாலும் ஏவப்படக்கூடியது. அதாவது, இது ஒரு முழுமையான ஸ்ட்ராட்டஜிக் ஆயுதம்.

இந்த ET-LDHCM, பாரம்பரிய ஏவுகணைகளைவிட வேகம், துல்லியம், தூரம், அழிவுத்திறன் என எல்லா அம்சங்களிலும் முன்னிலையில் உள்ளது. இது பாரம்பரியமிக்க பிரம்மோஸை நிழலாக்கும் அளவுக்கு சக்திவாய்ந்தது. இது வழக்கமான தாக்குதல்களுக்கும் அணு தாக்குதல்களுக்கும் சமமாகப் பயன்படக்கூடியது.

இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு, இந்த நவீன தொழில்நுட்பம் கொண்ட நான்காவது நாடாக இந்தியா வரலாற்றில் எழுதப்படும்.

இந்த திட்டம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில், இந்தியாவின் பாதுகாப்பு பயணம் புதிய படிகளை எட்டிக் கொண்டிருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news