கர்மா உங்களை சும்மா விடாது என்று இந்திய நட்சத்திர வீரர், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் பதிவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் ஜூன் 20ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வதில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீண்டும் தன்னுடைய வேலையை காட்டி இருக்கிறார்.
நன்றாக பந்துவீசிய அன்ஷூல் கம்போஜ், கலீல் அஹமது, முகேஷ் குமார் ஆகியோரை கழட்டிவிட்டு, பயிற்சி போட்டியில் சொதப்பிய ஹர்ஷித் ராணாவுக்கு இடமளித்து ரிசர்வ் வீரராக தேர்வு செய்துள்ளார். பிளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்கள் காயமடைந்தால், அவர்களுக்கு பதிலாக ரிசர்வ் வீரர் களமிறங்குவார்.
தற்போது அந்த இடத்தை தான் ஹர்ஷித் ராணாவுக்கு, கம்பீர் வழங்கி இருக்கிறார். இந்தநிலையில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில், ” கர்மா அதன் காலத்திற்கு காத்திருக்கிறது. நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
கர்மா உங்களை மன்னிக்காது. கண்டிப்பாக உங்களைத் திருப்பி அடிக்கும், ” இவ்வாறு பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” உங்களுக்கான நேரம் வரும் என்று அவருக்கு ஆறுதலும், ”நீங்க தயவுசெஞ்சு ராஜினாமா பண்ணிடுங்க. இந்திய அணி உருப்படட்டும்,” என்று கம்பீரை வசைபாடியும் வருகின்றனர்.