தற்போது நடந்து வரும் இஸ்ரேல்-ஈரான் மோதல் ஆறாவது நாளை எட்டியுள்ளது. இந்த யுத்தம் மத்திய கிழக்கில் பதட்டங்களை பெருக்கி, ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. மனித உரிமைகள் குழு தெரிவித்ததாவது, இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் ஈரானில் குறைந்தது 585 பேரை கொன்று, 1,326 பேரை காயப்படுத்தியுள்ளது. இவற்றுள் பலர் அணி விஞ்ஞானிகள் மற்றும் உயரிய இராணுவ அதிகாரிகளும் உள்ளனர். தெஹ்ரான் மற்றும் பல நகரங்களில் நடந்த இந்த தாக்குதல்கள் மக்கள் மனதில் குழப்பத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த பதட்டமான சூழலில், சமூக ஊடகங்களில் மீண்டும் பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் மீண்டும் பறக்கிறது. 16 வயதான அடெஃபே சஹாலாவின் (Atefeh Sahaaleh )கதை தான் இது. சிலர் இந்தப் பெண் ஒரு அப்பாவி என்றும், ஈரான் ஒரு தவறான குற்றச்சாட்டில்அவருக்கு தண்டனை கொடுத்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் என்ன நடந்தது தெரியுமா?
ஈரானின் அறநெறிப் போலீசாரின் படி, அடெஃபே ஒரு ஆணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இதற்காக அவர் மரண தண்டனையை எதிர்கொண்டார். தெஹ்ரானின் மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. மேலும், ஈரானிய சட்டப்படி 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு மரண தண்டனை வழங்க முடியாது என்பதால், அவருடைய வயது 22 என்று காட்டி ஆவணங்கள் சிதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அடெஃபேவின் வாழ்க்கை வரலாறும் மனதில் மாறுபட்ட உணர்வுகளை ஏற்படுத்துகிறது. தாயார் சாலை விபத்தில் உயிரிழந்தார், தந்தை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். அதனால் அவள் தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்தார், வீட்டில் சமையல் செய்து, குடும்பத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு உளவியல் ஆய்வு தெரிவிப்பது என்னவென்றால், அவள் பாசத்திற்கும், சொந்தங்களை கொண்டாடுவதற்குமான ஆவல் கொண்டவள்,அதற்காக அவள் ஏங்கியதாகவும் தகவல் தெரிகிறது.
பிபிசியின் ஆவணப்படமான “எக்ஸிகியூஷன் ஆஃப் எ டீனேஜ் கேர்ள்”(Execution of a Teenage Girl) இந்த வழக்கில் நீதிபதி அடெஃபே மீது தனிப்பட்ட வெறுப்பை காட்டியுள்ளதாகவும் கூறுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் இன்னும் பல விசாரணைகளையும், எதிர்ப்பார்ப்புகளையும் உருவாக்கி வருகிறது.
இப்போது உலகம் அமைதிக்காக வேண்டுகோள் விடுக்கின்றது, ஆனால் இப்போதும் இரு நாடுகளின் மோதல் நிலை தீவிரமாக மாறி, மத்திய கிழக்கு முழுவதும் பதட்டங்களும் அச்சங்களும் பெருகிவருகின்றன.