இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களுக்கு ஏற்றவாறு அதில் அடிக்கடி புதுப்புது அப்டேட் வெளியிடப்படும்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராம் புதிய ரீபோஸ்ட் (Repost) வசதியை சோதனை செய்யத் தொடங்கியுள்ளது. இது ‘எக்ஸ்’ போன்ற சமூக வலைதளங்களில் உள்ள ரீஷேர் (reshare) செயல்பாட்டைப் போலவே இருக்கும்.
இந்த புதிய வசதி மூலம், பயனர்கள் ஒருவரது அசல் பதிவையும், மற்றொருவரது பதிவையும் இணைத்து புதிய பதிவு உருவாக்கி பகிர முடியும்.
இதுவரை பயனர்கள் தங்கள் Stories மட்டும் பகிர முடிந்தது. ஆனால் இப்போது இந்த வசதி இன்ஸ்டாகிராம் ஃபீட்டில் நேரடியாக பகிர அனுமதிக்கும். இந்த புதிய வசதி விரைவில் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.