Monday, June 9, 2025

ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு! ரயில் டிக்கெட் எடுக்க பணம் செலுத்த வேண்டாம்! சூப்பர் வசதி பற்றி தெரியுமா?

ரயில் பயணம் என்றல் நம்மில் நிறைய பேருக்கு ரொம்பவே பிடிக்கும். அன்றாடம் வேலைக்கு சென்று வருபவர்களுக்கு வசதியான போக்குவரத்தாகவும் ரயில் பயணம் இருக்கிறது. இந்நிலையில் IRCTC பயணிகளுக்கான ‘ePayLater’ என்ற ஒரு வசதி நடைமுறையில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்? இதன் மூலம் நீங்கள் உடனடியாக பணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பிறகு 14 நாட்களுக்குள் எளிதாக பணத்தை செலுத்தும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ePayLater என்பது IRCTCயின் வலைத்தளம் மற்றும் மொபைல் ஃபோன் செயலியில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு டிஜிட்டல் கட்டண Option. இந்த வசதியின் மூலம், பயணிகள் ரயில், விமானம் மற்றும் டூர் பேக்கேஜ் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை உடனடியாக முன்பதிவு செய்து 14 நாட்களுக்குள் பணத்தை செலுத்த முடியும். அதற்கு எந்த வட்டியும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு அல்லது சர்வதேச பயணம் என ஏதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் IRCTC இன் அனைத்து டூர் பேக்கேஜிற்கு ePayLater மூலம் முன்பதிவு செய்து 14 நாட்களுக்குள் பணத்தை  செலுத்த முடியும். IRCTC இணையதளம் அல்லது App-ஐ Open செய்து உங்களுக்கு விருப்பமான ரயில், விமானம் அல்லது டூர் பேக்கேஜிற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு கட்டணப் பக்கத்திற்குச் சென்று ‘ePayLater’ விருப்பத்தைத் Click செய்தால் முன்பதிவு உடனடியாக நிறைவடையும். மேலும் பணம் செலுத்த உங்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news