Sunday, June 8, 2025

ரஷ்யா, சீனா, இஸ்ரேல் கிடையாது…உலகின் விலையுயர்ந்த ‘அணுகுண்டு’..எந்த நாட்டுல இருக்குன்னு பாருங்க!

வல்லரசு நாடுகள் தொடங்கி வளரும் நாடுகள் வரை, அணுகுண்டு தயாரிப்புக்கென தனி முக்கியத்துவம் அளிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் போர், இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் போன்றவற்றால், அணுகுண்டு மீதான ஆர்வம், உலக மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சமீபத்திய நிலவரப்படி ரஷ்யா, அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, சீனா, ஜெர்மனி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் உலகின் மிகவும் விலையுயர்ந்த, அணுகுண்டினை வைத்திருக்கும் நாடு குறித்து தெரிய வந்துள்ளது.

அதன்படி அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட B61-12 தான், இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகவும் விலையுயர்ந்த அணு ஆயுதமாகக் கருதப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 240 கோடியாகும். 2025ம் ஆண்டு நிலவரப்படி உலகில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான, அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். அணுகுண்டுகள் வெடித்தால் அதன் கதிர்வீச்சு நீண்ட காலத்திற்கு மக்களுக்கும், விலங்குகளுக்கும் தீமை விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அணுகுண்டால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மிகப்பெரும் அழிவை சந்தித்ததை, இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். 1945ம் ஆண்டு அமெரிக்கா வீசிய அந்த 2 அணுகுண்டுகளால், ஜப்பானை சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news