இந்தியாவுக்கு எதிராக நிலவும் நிலைமையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், சீனாவிடம் நம்பிக்கை இழந்துவிட்டது. இதனால், பாகிஸ்தான் துருக்கியை அணுகி, புதிய ரேடார் அமைப்பாக ஏஎல்பி 300 ஜி வாங்க முயற்சிக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவ தளங்களை சரியான நேரத்தில் முறியடித்தது. இந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, சீனாவின் முக்கியமான HQ-9 வான்வெளி பாதுகாப்பு ரேடார் அமைப்பும் செயலிழந்தது.
இதுவரை பாகிஸ்தான் ராணுவத்தின் 80 சதவீத தளவாடங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. அதில் முக்கியமான ஒன்று, HQ-9 ரேடார் அமைப்பாகும். இது எதிரி ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்களை நீண்ட தூரத்தில் கண்டறிந்து, தாக்குதலுக்கு முன்பே எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க உதவுகிறது. ஆனால், இந்தியாவின் துல்லிய தாக்குதல்கள் இதை முற்றிலும் பிளவு செய்து, பாகிஸ்தானின் ராணுவத்தை பாதித்தன.
இதனால், பாகிஸ்தான் சீனாவின் ரேடார் அமைப்புகளை நம்பாமல், துருக்கியின் ALP 300-G ரேடாரை வாங்க aselsan நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ALP 300-G ஜி என்பது டிஜிட்டல் பீம்ஃபார்மிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நீண்ட தூரத்திலிருந்து ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்களை கண்டறிந்து கண்காணிக்கும் திறன் கொண்ட ரேடார் அமைப்பாகும்.
இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால், இந்த அமைப்பை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு சுலபமாக நகர்த்த முடியும். 30 நிமிடங்களில் மட்டுமே ரேடாரை அமைத்து செயல்படுத்த முடியும். இது நேட்டோ ஏர் கமாண்ட் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம்களுடன் இணைந்து வேலை செய்யும் திறன் கொண்டது. அதனால் அனைத்து வானிலை சூழலிலும் சீரான கண்காணிப்பு நடக்கிறது.
இந்தியாவின் துல்லிய தாக்குதல்களை தவிர்க்க பாகிஸ்தான் இப்போதே துருக்கியின் புதிய ரேடார் தொழில்நுட்பத்தை கையில் கொண்டு தனது பாதுகாப்பை மேம்படுத்த விரும்புகிறது.
இதன் மூலம், பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்களில் ஏற்பட்ட பல பாதிப்புகளை இவ்வாறு மீட்டெடுக்க முயற்சி செய்கிறது என்று தெரிகிறது.