Friday, June 6, 2025

ஆதார் கார்டுல இது எல்லாம் ‘Check’ பண்ணிக்கோங்க! இல்லைனா ‘cancel’ ஆகிடும்!

தற்போதுள்ள காலக்கட்டத்தில், ஆதார் அட்டை இல்லாமலோ, அதில் பிழைகள் இருந்தாலோ, அரசாங்க நலத்திட்டங்களைப் பெறுவது மிகவும் சிக்கலாகி விட்டது. உங்கள் பெயரில் ஒரு எழுத்துப் பிழை இருந்தாலும் சரி… முகவரியில் ஒரு குறிப்பு தவறிருந்தாலும் சரி… அது உங்கள் உரிமைகளை மறுக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தலாம்.

ஊராட்சி முதல் தலைநகரம் வரை – அரசு வழங்கும் மானியங்கள், ஓய்வூதியம், உதவித்தொகை, உணவு ரேஷன், வீட்டு வசதி, படிப்பு உதவி என அனைத்தும் இன்று ஆதார் அட்டையை அடிப்படையாகவே வைத்துக் கொண்டு வழங்கப்படுகின்றன.

ஆனால் உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் பொருந்தவில்லையெனில்… அல்லது ரேஷன் கார்டு தகவல்களுடன் சரிபடவில்லையெனில்… DBT மாதிரியான திட்டங்களில் நிதி உதவி தானாகவே நிறுத்தப்படும்.

உங்கள் வயது தவறாக இருந்தால் – மாணவர் உதவித்தொகை, மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம் போன்ற திட்டங்களிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம். முகவரி பிழையாக இருந்தால், உஜ்வாலா யோஜனா, பிரதமர் ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போகலாம்.

“அதனால் தான், ஆதார் அட்டை ஒரு முக்கிய ஆவணம் மட்டுமல்ல… உங்கள் எதிர்கால நலன்களுக்கான ஒரு அடித்தளமாக உள்ளது.”

இது எல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு பொறுப்பு. அதே நேரத்தில், உங்கள் உரிமையை பாதுகாக்கும் ஒரு முன்னெச்சரிக்கையும் கூட …

அதற்காக, இப்போது நீங்கள் செய்ய வேண்டியது – உங்கள் ஆதார் அட்டையில் உள்ள அனைத்து விவரங்களையும் சீராக ஒரு முறை கவனமாக சரிபார்க்க வேண்டும். பெயர், பிறந்த தேதி, முகவரி, பாலினம் – எல்லாமே சரியாக உள்ளதா என கவனிக்க வேண்டும். பிழைகள் இருந்தால், அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news