Tuesday, June 10, 2025

சுகோய் 57E-கொலை ஆயுதம்! ஆஃபர் கொடுக்கும் ரஷ்யா! மவுனம் காக்கும் இந்தியா! அலறும் உலக நாடுகள்!

ரஷ்ய தயாரிப்பான 5ம் தலைமுறை விமானம் சுகோய்-57E சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும் இன்னும் இந்த விமானங்களை வாங்குவது குறித்து இந்தியா இதுவரை மவுனம் காத்து வருவதற்கு ஒரு முக்கிய பின்னணி இருக்கிறது. இந்தியாவின் இந்த தயக்கத்துக்கு காரணம் என்ன? ரஷ்யா தாமாக வந்து தங்க தட்டில் வைத்து கொடுக்கும் Offer என்ன என்பவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரஷ்யா ‘எங்களிடமிருந்து வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று கூறும் சுகோய்-57E இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த விமானம் பொது வெளியில் கூட இன்றளவும் காட்சிப்படுத்தப்படவில்லை. அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற LIMA 2025 எனும் விமான கண்காட்சியில் சுகோய்-57E இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானம் காட்சிப் பொருளாக மட்டுமே இருந்ததேயன்றி வானில் கூட பறக்க இல்லை.

அமெரிக்காவின் F-22, F-35 போன்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை பின்னுக்கு தள்ளுவதாக SU-57E இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், ஆரம்பமே இப்படி ஆட்டம் கண்டால் எப்படி? ரேடாரால் கண்டுபிடிக்கமுடியாது, R-37M போன்ற நீண்ட தூர ஏவுகணைகளை இதில் சுமந்து போக முடியும் என பல அட்டகாசமான அம்சங்கள் இந்த விமானத்திற்கு இருந்தாலும், விமானம் கண்ணிலேயே படாமல் இருப்பதால் இந்தியா விழுந்தடித்துக்கொண்டு இதை வாங்க முற்படவில்லை.

தற்போது இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா என சுற்றி சுற்றி பதற்றம் நீடித்து வருவதால் மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் தன் ஆயுத பலத்தை Upgrade செய்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த சூழலில் நம்முடைய போர் ஆயுத நண்பனான ரஷ்யா, சுகோய்-57E எனும் 5ம் தலைமுறை போர் விமானத்தை இந்தியாவுக்கு கொடுக்க முன் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி சுகோய்-57E போர் விமானத்தை இந்தியா வாங்கி அது வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்பட்சத்தில் அது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு மட்டுமல்லாமல் மற்ற உலக நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக இருக்கும் என்பது நிச்சயம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news