இந்தியாவின் வான்பரப்பை எப்படியாவது பாதுகாப்பதற்கான பெரிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே S-400 போன்ற அதிநவீன ஏவுகணை மறுப்பு சிஸ்டத்தை கொண்டிருந்தாலும், தற்போது ரஷ்யாவிடம் இருந்து இன்னும் அதிக சக்திவாய்ந்த ரேடார் மற்றும் ஏவுகணை மறுப்பு சிஸ்டங்களை வாங்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
முக்கியமாக, ஸ்டெல்த் போர் விமானங்களை கூட கண்டுபிடிக்கக்கூடிய Container-S ரேடார் – இது தான் இந்தியாவின் அடுத்த பாதுகாப்பு கவசம். ரஷ்யாவின் மிகத் திறமையான OTH (Over The Horizon) ரேடார் சிஸ்டமான இது, 3,000 கிலோமீட்டருக்கும் அதிகம் தூரத்தில் வான்வழி அச்சுறுத்தல்களை கண்டுபிடிக்கக்கூடிய திறன் கொண்டது.
மற்ற சாதாரண ரேடார்களால் முடியாத இடங்களில் கூட இது செயல்படும் – அதுவும் மேற்பரப்பு அலை தொழில்நுட்பத்துடன் இது இயங்கும் . இந்த ரேடார், ஸ்டெல்த் விமானங்களையும், பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் முன்னதாகவே கண்டுபிடித்து எச்சரிக்கையளிக்கிறது.
இந்த Container-S ரேடார் 2013ல் ரஷ்யாவில் செயல்பாட்டுக்கு வந்தது. 2019லிருந்து உக்ரைன் போரிலும் ரஷ்யா இதை முழுமையாகப் பயன்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தை இந்தியா ஏன் இப்போது எடுக்கிறது தெரியுமா?
பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து J-35A என்ற ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த விமானங்கள், இந்தியா மீது தாக்குதல் நடத்தும் வகையில், சீனாவால் குறைந்த வட்டியில், கடன் வசதியுடன் வழங்கப்படுகின்றன.
அதற்காகவே தான் இந்தியா, Container-S போல் வான்வழி கண்காணிப்பு சிஸ்டங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் ரஷ்யாவுடன் தொடங்கியுள்ளது. இந்த ரேடார் செயல்படத் தொடங்கினால், இந்தியாவின் வான்பரப்பை ஒரு இரும்பு சுவராக இது பாதுகாக்கும்.
இந்தியாவிற்கு எதிராக வலுப்பெறும் சீனா-பாகிஸ்தான் கூட்டணி என்ன செய்யப்போகிறதோ தெரியாது. ஆனால், அதற்கும் மேலாக தயாராக இருக்க இந்தியா இப்போது இதை செய்கிறது. இந்த Container-S ரேடார் வந்துவிட்டால், வானில் எதுவும் ஒளிந்து இருக்க முடியாது!