Sunday, December 28, 2025

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் எச்.ராஜா ஆகியோர் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் காவலர்கள் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ், சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், மதுரை திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகன் கோவிலுக்கு சொந்தமானது என்றும், அங்கிருக்கும் தர்கா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேசி உள்ளனர்.எனவே மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதையடுத்து மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News