உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இன்று பிற்பகல் 3.24 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.