Monday, February 24, 2025

பாம்பு, பல்லிகளை விமானத்தில் கடத்திய பயணி – அதிகாரிகள் விசாரணை

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சட்ட விரோதமாக விலங்குகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாய்லாந்து நாட்டில் இருந்து டெல்லி வந்த 3 பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பயணி ஒருவர் சட்டவிரோதமாக பாம்புகள், பல்லிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களை சுங்க அதிகாரிகள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

Latest news