ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.