சென்னையில் ஆபத்தான முறையில் மாநகர பேருந்தை இயக்கியபடியே ரீல்ஸ் பதிவிட்ட ஓட்டுநர், நடத்துநர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் இருவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.