Saturday, December 20, 2025

விரைவில் கைதாகும் சீமான்?…தமிழகம் முழுவதும் 70 வழக்குகள் பதிவு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். இதற்க்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சீமானை கண்டித்தும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் கரூர் மண்டல செயலாளர் சசிகுமாரின் கார் கண்ணாடி கல்வீசி தாக்கப்பட்டது.

சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது வரையில் தமிழகம் முழுவதும் 70 வழக்குகள் சீமான் மீது பதிவாகி உள்ளது. சீமான் மீது சட்டரீதியாக கைது நடவடிக்கை எடுப்பது பற்றி சட்ட வல்லுனர்களின் கருத்துகளை போலீஸ் அதிகாரிகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சீமான் விரைவில் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

Latest News