Wednesday, February 5, 2025

கனமழையால் இடிந்து விழுந்த பார்க்கிங் சுவர்..சொகுசு கார்கள் சேதம்..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று இரவு 11 மணிமுதல் 2 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் தனியார் பார்க்கிங் சுவர் இடிந்து விழுந்ததில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது.

ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலை ஆனந்த் திரையரங்கம் அருகே உள்ள தனியார் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த வாகன காப்பகத்தில்  சுமார் 200க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் சரக்கு வாகனங்கள் உட்பட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தில் 10 சொகுசு கார்கள், இரண்டு ஆட்டோக்கள் மற்றும் இரண்டு டூவீலர்கள் உட்பட 15ற்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் மீது சுவர் இடிந்து விழுந்து அனைத்து வாகனங்களும் முற்றிலும் சேதமடைந்தன.சுவர் இடிந்து விழுந்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest news