Sunday, July 20, 2025

சாலையோரம் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லாரி – 3 பேர் பலி

மராட்டிய மாநிலம் புனேவில் வகோலி என்ற இடத்தில் சாலையோரம் கட்டுமானத் தொழிலாளர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news