வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று வலு இழந்த நிலையில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக 16, 17, 18 ஆகிய தேதிகளில் டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்கனவே தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருநெல்வேலி
தூத்துக்குடி
தென்காசி
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தேனி
விழுப்புரம்
திருச்சி