Saturday, May 10, 2025

வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலு குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இந்நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest news