Wednesday, January 14, 2026

இனி பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை பாயும்…போக்குவரத்து துறை அதிரடி

கார் மற்றும் ஆட்டோவுக்கு பிறகு, பைக் டாக்ஸி சேவையின் பயன்பாடு முக்கிய நகரங்களில் அதிகரித்து வருகிறது. மோட்டார் வாகன விதிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.

இதற்கான காரணமாக, வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு எதிராக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் பைக் டாக்ஸிகளை இயக்குவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளன.

Related News

Latest News