Friday, June 6, 2025

தெலுங்கானா சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அம்ராபாத்தில் உள்ள அணையில் புதிதாக சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சுரங்கம் கட்டுமானப் பணியின் போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 8 பேர் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்கும் பனி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் மண் சரிவில் சிக்கிய 8 பேரும் ஒரு வாரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 5 பேரின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி உடைந்த இயந்திரத்தின் அடியில் சிக்கி மரணம் அடைந்தது உறுதியாகி உள்ளது. அவர்களின் உடல்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news