உத்தரகாண்ட் மாநிலத்தில் குப்தகாசி இருந்து கேதர்நாத் கோயிலுக்குச் செல்லும் ஆர்யன் ஏவியேஷன் ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் – சோன்பிரயாக் காட்டுப்பகுதியில் மோசமான வானிலை காரணமாக இன்று அதிகாலை 5:20 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானி மற்றும் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவும், மாநில மீட்பு அணி மற்றும் போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.