Monday, June 16, 2025

ஹோலி கொண்டாட்டம்: ரசாயன பொடி வீசியதில் 7 மாணவிகளுக்கு மூச்சு திணறல்

நாடு முழுவதும் நேற்று பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது ரசாயன பொடி வீசப்பட்டது. அந்த மாணவிகள் பேருந்தில் ஏறிய பிறகும் அந்த கும்பல் மாணவிகள் மீது ரசாயன பொடியை வீசியுள்ளனர்.

அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபீனைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்தாக கூறப்படுகிறது. இதனால் 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 7 பேரில் 4 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

மாணவிகள் மீது வண்ணம் பூசிவிட்டு பைக்கில் தப்பியோடிய அந்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news