தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து, 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் அறிவிக்கப்பட்டனர்.
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. கமல்ஹாசன் உட்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.