மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவில் இருந்து மும்பை நோக்கி பயணித்த புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக 10 பேர் கீழே விழுந்தனர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.