இந்த ஆண்டு ஆயுத பூஜை (அக்டோபர் 1) கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று (அக்.2) சரஸ்வதி பூஜை, தசரா, காந்தி ஜெயந்தி, கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 1, அக்டோபர் 2 ஏற்கனவே விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 3-ம் தேதியான வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டால் சனி, ஞாயிறு சேர்த்து 5 நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் நாளை 03-102025 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்துள்ளது