Saturday, May 31, 2025

உ.பி யில் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – குற்றவாளியை சுட்டுப்பிடித்த பெண் போலீஸ்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் கமல் கிஷோர். இவர் அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் லக்னோ போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சகினா கான் விசாரணை நடத்தினார். கமல் கிஷோர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார் கைது செய்வதற்காக விரைந்தனர். போலீசார் வருவதை கண்ட கமல் கிஷோர் தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது கமல் கிஷோரை சப்-இன்ஸ்பெக்டர் சகினா கான் துப்பாக்கியால் சுட்டதில் காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார்.

இதையடுத்து கமல் கிஷோரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news