குஜராத், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. இதில் குஜராத்தின் விசாவதார் மற்றும் காடி ஆகிய 2 தொகுதிகளுக்கும், கேரளாவின் நிலம்பூர், மேற்கு சங்கத்தின் காளிகஞ்ச், பஞ்சாபின் லூதியானா மேற்கு என மொத்தம் 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 5 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்திருக்கிறது.
கேரள மாநிலம் நிலம்பூர் தொகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. அங்கு 11,077 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நிலம்பூரில் 8,562 வாக்குகள் மட்டுமே பெற்று பாஜக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. ஆளும் பாஜக அங்கு பின்னடைவை சந்தித்துள்ளது. அதே போல கேரளாவில் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.