ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் இன்று (29-06-2025) காலை, குழாய் பதிக்க 10 அடி ஆழத்தில் தோண்டிய பள்ளத்தில் மண் திடீரென சரிந்து விழுந்தது. இதில் 12 தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கினர். இந்த சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மண் அகற்றும் இயந்திரங்களை பயன்படுத்தி சிக்கியவர்களை மீட்க முயற்சி எடுத்து வருகின்றனர்.