ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 23 குழந்தைகள் பலி : சூடானில் சோகம்

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவியது. 2.5 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த போரால் சுமார் 1.5 கோடி பேர் தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறினர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவானது.

குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் போனது. இதன் காரணமாக அங்குள்ள கோர்டோபான் பிராந்தியத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 23 குழந்தைகள் இறந்ததாக சூடான் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

Related News

Latest News