2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியானது. கடந்த அக்டோபர் 6 தேதி முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நேற்று அக்டோபர் 7ம் தேதி, 2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று வேதியியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுசுமூ கிட்டாகாவா {Susumu Kitagawa}, ரிச்சர்ட் ராப்ஸ்சன் { Richard Robson}, ஒமர் யாகி {Omar M. Yaghi} ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.