Monday, June 30, 2025

‘Ind Vs Eng’ தொடருக்கு நடுவே 2 வீரர்கள் ‘ஓய்வு’ அறிவிப்பு?

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் வருகின்ற ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது. இதில் பும்ரா விளையாட மாட்டார் என தெரிகிறது. அத்துடன் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணா, முஹம்மது சிராஜ் ஆகியோருடன் பேட்ஸ்மேன் சாய் சுதர்சனும் இந்த போட்டியில் விளையாட மாட்டார்களாம்.

இதனால் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் நிதிஷ் குமார் ரெட்டியை களமிறக்க கில் – கம்பீர் கூட்டணி முடிவு செய்துள்ளதாம். முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் 2வது போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.

இந்தநிலையில் டெஸ்ட் தொடருக்கு நடுவே ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமி இருவரும் ஓய்வினை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஜடேஜாவிற்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் இருக்கிறார். இதனால் 2வது டெஸ்ட் போட்டியில் தன்னால் சிறப்பாக ஆடமுடியவில்லை என்றால் ஓய்வு அறிவித்து விடுவேன் என்று, ஜடேஜா BCCIயிடம் தெரிவித்து ஒப்புதல் வாங்கி விட்டாராம்.

ஜடேஜாவின் முடிவிற்கு BCCIயும் ஒப்புக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. இதேபோல 3வது டெஸ்ட் போட்டி வரை பார்த்துவிட்டு, ஷமியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவிக்க முடிவு செய்துள்ளாராம். மாற்று வீரராக அழைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதால் கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாம் என்பது ஷமியின் எண்ணமாக இருக்கிறதாம்.

எனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு நடுவிலேயே ஜடேஜா, ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு செய்தி வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news