ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களின் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்காக IRCTC செயலியை பயன்படுத்துகின்றனர். இதில் IRCTC Rail Connect போலியாக பல உள்ளதாகவும், இந்த செயலிகள் மக்களை ஏமாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் தெரிவித்திருந்தது. எனவே செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு பலமுறை அதன் உண்மை தன்மையை சோதனை செய்ய வேண்டுமென அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், டிக்கெட் முன்பதிவுக்காக தொடங்கப்பட்ட 2.5 கோடி போலி User ID-க்களை ரயில்வே நீக்கியுள்ளது. தட்கல் முன்பதிவின்போது, சில போலி ஐடிக்கள் மூலம் டிக்கெட்டுகள் பெறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.