மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக இந்து மற்றும் முஸ்லிம் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாளைய தினம் இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் மதுரை திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது. இதனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர்.
இதனிடையே இந்து மற்றும் இசுலாமிய அமைப்புக்களை சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து தங்கள் கோரிக்கையை பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் பிரவேசிக்காத வகையில் 3-2-2025 காலை 6 பணி முதல் 4-2-2025 இரவு 12 மணி வரை 2 நாட்கள் மட்டும் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பொது அமைதியை 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா அறிவிப்பு விடுத்துள்ளார்.