- சென்னை மாநகரில் 207 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 120 புதிய மின்சார பேருந்து சேவை தொடக்கம். 47.50 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வியாசர்பாடி பணிமனையில் இருந்து மின்சார பேருந்து சேவையை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- காவல்துறையில் 21 முதல் நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவிநிலை உயர்வு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர். மருத்துவத்துறையில் 172 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை. விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி.
- சென்னை மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம். அமித்ஷா குறித்த ஆ.ராசா விமர்சனத்தை கண்டித்து பாஜக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
- சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டவரை , அவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் தாக்கியது ஏன்? அடித்துக்கொல்லப்பட்டவர் என்ன தீவிரவாதியா என்றும் திருப்புவனம் இளைஞர் கொலை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
- சென்னையை அடுத்த கூவத்தூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிப்படுகொலை. தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வரும் கூவத்தூர் போலீசார்.
- திருப்பூரில் 2 நாட்டு துப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் இரண்டு பீகார் இளைஞர்கள் கைது. வீரபாண்டி போலீசார் தீவிர விசாரணை.
- மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம். 2 மூத்த என்ஜினீயர்கள் உள்பட 7 என்ஜினீயர்கள் பணியிடை நீக்கம்.
- குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் தீ விபத்து. உரிய நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்
Follow on Google News