Wednesday, December 17, 2025

12 நாட்கள் விடுமுறை., பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கிது. 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கின. அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகள் வரும் 23-ந்தேதியுடன் முடிவடைகின்றன.

இந்நிலையில் மாணவர்களுக்கு டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 4-ந்தேதி வரை 12 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 5-ந்தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related News

Latest News