உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் கோவிலுக்கு சென்றனர். கோவிலுக்கு சென்ற பிறகு அவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த கால்வாயில் தலை குப்புற பாய்ந்தது. இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.